நீதி தேவை

சாத்தான் குளம் சம்பவத்தில்  நிதி உதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை என்று   நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்


இது குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் விடுத்த அறிக்கையில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும்  மனித உரிமை மீறலும் சட்டமீறலும் நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை விதைத்திருக்கிறது, 
ரத்தம் சொட்ட சொட்ட  இருவரை தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதக குற்றம், நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன், இரு காவல் உதவி ஆய்வாளர்கள்  நினைத்தால் இரண்டு கைதிகளை காவல் நிலையத்தில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா  அதற்கு எத்தனை துறைகள் உதவியிருக்க வேண்டும், எத்தனை பேர் உடனிருந்திருக்க வேண்டும், அந்த உணர்வுகளை ஆராயாமல்  பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்று அரசுக்கு புரியவில்லையா  அது போதும் என்று அரசு நினைக்கிறதா என்று கமல் ஹாசன் கேள்வி  எழுப்பியுள்ளார், 


இறந்தவர் குடும்பத்திற்கு  நிதியும் நிவாரணமும் தேவை தான்,  அதை மட்டும் அறிவித்து விட்டு கடந்து விடக்கூடாது என்றும் நிதி உதவியை விட இரண்டு உயிர்களுக்கு  நீதி தேவை என்று என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்