வாரி வழங்கிய முதலமைச்சர்

 வறுமையில் வாடும் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், 


இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்  கிராமப்புறங்களில் சட்டம் பயின்ற வழக்கறிஞர்கள் அவர்களது தொழிலை சிறந்தமுறையில் ஆற்றுவதற்காக மூத்த வழக்கறிஞர்களுடன் பயிற்சி மேற்கொள்வதற்கே   மூன்றாண்டுகள்அல்லது நான்காண்டுகள்  தேவைப்படுகிறது என்றும் சில வழக்கறிஞர்கள் தங்களது தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு திரும்பி விடுகின்றனர்,என்று தெரிவித்துள்ள முதல்வர்  இது போன்ற நிலையை மாற்றுவதற்காக  வறுமையில் வாடும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும்  ரூ 3 ஆயிரம் உதவித்தொகையை வழங்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள  மூத்த வழக்கறிஞர் எல்.முருகவேலு,எந்த முதல்வரும் சிந்திக்காத ஒரு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், அதற்காக  இளம் வழக்கறிஞர்கள்  சார்பில் எங்களது பாராட்டுக்களை  தெரிவித்துக்கொள்கிறேன் . .நானும் இளம் வழக்கறிஞராக தொழிலுக்கு வந்தவன் தான், நான் வழக்கறிஞராக பதிவு செய்த போது 60 பேர் வழக்கறிஞர்கள் ஆனார்கள் ஆனால் இப்போது ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கிறார்கள், அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்பதை அறிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள முடிவை வரவேற்கிறேன் என்றார் அவர்