காற்றின் மூலம் பரவலா

காற்றின் மூலம் கொரோனா பரவுவதாக வெளியான தகவல் முழுமையானதல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 


சென்னை கிண்டியில்  உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில்  750 படுக்கைகள் கொண்ட கொரோனா நோய்த்தடுப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று துவக்கி வைத்தார் அப்போது முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கையில் சென்னையில் நோய்ப்பரவலை தடுக்க காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் நோய்த்தொற்று அறிகுறிகளுடன்  10 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் வீடு வீடாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும்  ஊரடங்கு  உத்தரவு காரணமாக நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நோய்த்தொற்று குறையத்தொடங்கியுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க  ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு முறையும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அத்தியாவசிய  பொருட்கள்  வழங்கப்பட்டுள்ளது என்றும்  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்,  திமுக ஆட்சிக்காலத்தில் மழை வெள்ளம் புயல் போன்றவற்றிற்கு என்ன நிதி வழ்ங்கப்பட்டது என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார், அரசின் நிதிநிலைக்கேற்ப மக்களுக்கு வழங்கப்படுகிறது என்றும்  தமிழகத்தில் நோய்த்தொற்று சமூக பரவலை மாறவில்லை என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்,