ஆஸ்கர் நாயகனுக்கு அமைச்சர் ஆதரவு

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக வதந்திகள் பரப்பும் பாலிவுட் வில்லன்களுக்கு  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்


இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், பாலிவுட்டில் ஒரு தரப்பு தனக்கு படங்கள் கிடைக்காமல் செய்ய சதி செய்து வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார், இந்த விவகாரத்தில  கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் ரகுமானுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்திருந்தனர், தற்போது அரசியல் வட்டாரத்திலும்  ஆஸ்கர் நாயகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது, இது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட சுட்டுரை பதிவு( டுவிட்டர் ) 


பாலிவுட்டில் தனக்கு எதிராக  ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும்  கிடைக்காமல்  இருப்பதற்கு  காரணமாக உள்ளனர், என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல  உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ்மண்ணின் ஆஸ்கர் நாயகன்  ஏ. ஆர். ரகுமான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது, எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது  இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்,  அவருக்கு என்னுடைய  மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்துகொள்கிறேன் என்று அந்த சுட்டுரை பதிவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்,