சாத்தான் குளம் சம்பவத்திற்கு வருத்தம்

சாத்தான் குளம் போலீஸ் பாதுகாப்பில் உயிரிழந்த  ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிஸ்க்கு இளநிலை உதவியாளருக்கான வேலை வாய்ப்பை   கருணை அடிப்படையில்  இன்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  வழங்கினார்


தலைமை செயலகத்தில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த  ஜெயராஜ் மகள் பெர்சீஸ் , தங்களது குடும்பம் அடைந்துள்ள  வேதனையில் இருந்து  மீள்வதற்காக அரசு, இந்த  வேலைவாய்ப்பு வழங்கியுிருக்கிறது என்றும்  முதலமைச்சர் எடப்பாடி கே., பழனிசாமி, சாத்தான் குளத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார் என்றும் நியாயமான முறையில் விசாரித்து தவறு செய்தவர்களுக்கு  தண்டனை பெற்று தருவோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்