நியாயவிலைக்கடைகளில் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக்கவசங்கள் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மறு பயன்பாட்டுத் துணி முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.தரமான பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முகக் கவசங்களை துவைத்துக் காயப்போட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் வழங்க முதல்கட்டமாக 4 கோடி முகக் கவசங்கள் தயாராக உள்ளன. மீதமுள்ள 7 கோடி முகக் கவசங்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் நியாயவிலைக்கடைகளின் மூலம் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
இன்று தலைமை செயலகத்தில்தொடங்கி வைக்கிறார்