உயிரிழப்புகள் மறைப்பு ஸ்டாலின் கேள்வி

 


எத்தனை அப்பாவிகளின் உயிரிழப்புகளை மறைத்தீர்கள் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்


இது குறித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்)  பதிவு


கணக்கிட தவறிய 444 என்பது வெறும் எண்ணிக்கை அல்ல: ஒவ்வொரு குடும்பத்தின் பேரிழப்பு, இதுவரை கணக்கிடப்படாத இறப்புகள் அனைத்தையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மொத்தமாக வெளியிட வேண்டும்,  \


ஜூன் 10 வரை தமிழகம் முழுவதும்  இறந்தோரின் எண்ணிக்கை வெறும் 326 என்று மூன்றில் ஒரு பங்கு கணக்கை மட்டுமே காட்டினார்கள்,  இன்னும் எத்தனை அப்பாவி மக்களின்  இறப்பினை மறைத்துள்ளீ்ர்கள், சென்னையில் மட்டும்  444 இறப்புகளை குறைவாக காட்டிய அரசு, பிற மாவட்டங்களிலும்  இதே போல ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது, என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்,


\ இது குறித்து விடையளித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் , கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் ஒருவர் உயிரிழந்தபிறகு அவர் எதனால் இறந்தார் என்று கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.இந்த நடைமுறையின் காரணமாக சில மரணங்கள் விடுபட்டுவிட்டன. அதனையும் சேர்த்து அரசு தற்போது வெளியிட்டுள்ளது  என்று தெரிவித்துள்ளார் இதற்கிடையில் மற்றொரு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் கோடிக்கணக்கில் மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று கமெண்ட் அடித்துள்ளார்