மாநிலம் முழுவதும் பேருந்துகள்- ரயில் போக்குவரத்து வரும் 7 ம்தேதி முதல் தொடங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாரக்
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை-
ஊரடங்கு உத்தரவானதுஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்புசெய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துபோக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒருமாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபாரநிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள்வந்துள்ளன. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டுநடைமுறைகளை பின்பற்றி 7.ம்தேதி முதல்தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொதுபேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயானரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி , தற்போது 7.ம்தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில்போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளைஅறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும்முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைபயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல்கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைகட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்: இதற்கிடையில் ரயில்கள் மாநில முழுவதும் இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவித்ததால் முன்பதிவுகள் நாளை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,