தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத்தொடர்ந்து கடந்த மார்ச் 25ம்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.இதைத்தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளுக்கு ஊக்குவிக்கப்பட்டன. இந்நிலையில் ஊடங்கு உத்தரவில் புதிய தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார் அதன் அடிப்படையில் வரும் 16ம்தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் .கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் அடிப்படையில்இயங்கலாம்என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதன்மூலம் ஒன்பதாம் வகுப்பில் இருந்து கல்லூரி மாணவர்கள் வரை ஆன் லைன் வகுப்பில் இருந்து 16ம்தேதி முதல் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது.16ம்தேதி முதல் ஆசிரியர்களின் வகுப்புகளில் பங்கேற்று தங்களது சந்தேகங்களுக்கு மாணவர்கள் நேரடியாக விளக்கம் பெறலாம் என்ற உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.