*சதுரங்க விளையாட்டில் சென்னை வேலம்மாள் நிறைநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்
தேஸசிய அளவிலான சதுரங்க விளையாட்டில் சென்னை முகப்பேர் கிழக்கு, வேலம்மாள் நிறைநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் நிகல் மகிழணன் மற்றும் பிளஸ் 2 மாணவர் ஹர்ஷ்வர்தன்.ஜி.பி. முறையே (யு-14),(யு-17) பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல் பிளஸ் 2 மாணவி பூர்ணா ஸ்ரீ. எம்.கே., எஸ்.ஜி.எஃப்.ஐ. நடத்திய 2018-19 ஆண்டுக்கான செஸ் சாம்பியன்ஷிப்(யு-17) பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஊரக கைத்தொழில் அமைச்சர் பி.பெஞ்சமின் தமிழ் அலுவலக மொழி மற்றும் தமிழ் கலாச்சார அமைச்சர் ம/.கே. பாண்டியராஜன் ஆகியோர், மாணவர்களின் தேசிய அளவிலான சாதனையைப் பாராட்டி மாணவர்களுக்குத் தலா இரண்டு லட்சம் ரூபாயும், மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாயும் காசோலையாக வழங்கிக் கௌரவித்துள்ளனர்.