வேல் யாத்திரையைகை விடுவது நல்லது என்று பிஜேபிக்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுறுத்தியுள்ளார்
சென்னை புரசைவாக்கத்தில் செயதியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளிக்கையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது. இது நல்ல
விஷயம். ஆனால், இரண்டாவது அலை, மூன்றாவது அலையையும் நாம்
பார்க்கவேண்டியுள்ளது. அதனால் பொதுமக்களைக் காக்க வேண்டியது யார்?
அரசாங்கத்தின் கடமையல்லவா? அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு
பொதுமக்களின் உயிரைக் காக்கும் தலையாயக் கடமைஅந்த கடமையை உணர்ந்துதான் இந்த நேரத்தில் வேல் யாத்திரை தேவையில்லை என
உணர்த்தியுள்ளோம். அதனால்தான் தமிழக அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை அவர்கள் உணர்ந்து பொதுமக்களுக்காக, பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயம்என்பதால் வேல் யாத்திரையைப் பாஜக கைவிடுவது அவர்கள் கட்சிக்கும் நல்லது,அவர்களுக்கும் நல்லது. தடை என்பதை அரசு அவர்களுக்குத்
தெரிவித்துவிடும்.அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால்தான்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. ஐபிசி, சிஆர்பிசி, எவிடென்ஸ் ஆக்ட்
உள்ளது. சட்டமில்லாமல் நாடு இல்லை. சட்டம் உள்ள நாட்டில் நாம் அனைவரும்
சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இருப்பதுதான் உண்மையில் ஜனநாயகப் பண்பு.
ஜனநாயகத்துக்கு உற்றவர்கள் என்று சொல்ல முடியும்.சட்டத்துக்கு
அப்பாற்பட்டவர்கள் என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யும். இது பாஜகவுக்கு
மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாகச் சட்டத்தை மதிக்க வேண்டும்.
அது எல்லோருக்கும் அழகு. இதைத் தனி மனிதனாக நான் வலியுறுத்துகிறேன்என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
--
D.Ramesh
Chief Reporter
Thinaboomi