சென்னையில் உருவாகும் அடர்ந்த காடுகள்

 


மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில்   கோட்டூர்புரத்தில் 20,724 சதுர அடியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் 40 வகையான 2,000 மரக்கன்றுகளும், வளசரவாக்கம் மண்டலம், கோட்டம்-155, ராயலா நகர், 2வது பிரதான சாலையில் 6,000 சதுர அடியில் ரூ.8.72 இலட்சம் மதிப்பீட்டில் 45 வகையான 762 மரக்கன்றுகளும், சோழிங்கநல்லுார் மண்டலம், வார்டு-197, மாதிரி பள்ளி சாலையில் 15,586 சதுர அடி கொண்ட நிலத்தில் 2,800 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மியாவாக்கி அடர்வனம் அமைக்கும் திட்டத்தில் இன்று . அசோக் பில்லர் சாலை, கே.கே.நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 8,339 சதுர அடி கொண்ட நிலத்தில் 6,450 சதுர அடியில் ரூ.9.85 இலட்சம் மதிப்பீட்டில் 30 வகையான 1,650 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டது.
இந்த மியாவாக்கி அடர்வனத்தில் பாரம்பரிய மரவகைகளான  வேம்பு, நாவல், நாகலிங்கம், பாதாம், மரமல்லி, ஸ்பாத்தோடியா/பட்டாடி, கொய்யா, கறிவேப்பிலை, மா, பெருநெல்லி, சிறுநெல்லி, தூங்குமூஞ்சி மரம், ஏழிலைப் பாலை, பலா, செண்பகம், பூ மருது, மகிழம், சப்போட்டா, சரக்கொன்றை, பூவரசு, நொச்சி, சீத்தாப்பழம், செம்மயிற் கொன்றை, மூங்கில், அத்தி, மருதாணி, புங்கம், செம்மந்தாரை, வசந்த ராணி, அச்சி நறுவிலி போன்ற மரவகைகள் கொண்டு அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது.   


இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) .மேகநாத ரெட்டி, மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.பி.என்.ஶ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள், மண்டல அலுவலர்.எம்.பரந்தாமன், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.