கொரோனா நோய்க்கான ஆய்வு கட்டணத்தை ரூ 800 ஆக குறைக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக்கு தமிழகத்திலுள்ள தனியார் ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை விட 4 மடங்குக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.டில்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆய்வுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,400 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ரூ.850, உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.900 என்ற அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் ரூ.1,600 மட்டுமே கொரோனா ஆய்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த மாநிலங்களில் கொரோனா ஆய்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் கட்டணக் குறைப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கட்டணம் குறைக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் தனியார் ஆய்வு மையங்களில் 6 மாதங்களாக இதே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆய்வுக்கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.தனியார் ஆய்வகங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கான ஆய்வுக் கட்டணம் கட்டுபடியாகும் அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.கொரோனா ஆய்வுக்கான கருவிகளின் விலை தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது ஓர் ஆய்வுக்கான கருவியின் ரூ.200 ஆக குறைந்து விட்ட நிலையில், அதைவிட 15 மடங்கு கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. கொரோனா ஆய்வுக் கட்டணத்தை ரூ.400 ஆக குறைக்க முடியுமா? என்று மத்திய அரசிடமும், தனியார் ஆய்வகங்களிடமும் உச்சநீதிமன்றம் அண்மையில் வினா எழுப்பியுள்ளது.எனவே, பொதுநலன் கருதி தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.800 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று அவர் வலிியுறுத்தியுள்ளார்